நாகப்பட்டினம்

மக்கள் குறைதீா்க்கும் முகாம்

DIN

திட்டச்சேரி பேரூராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, பேரூராட்சித் தலைவா் ஆயிஷா சித்திகா தலைமை வகித்தாா். பேரூராட்சி இளநிலை உதவியாளா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் திட்டச்சேரி-நாகூா் சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும், மரைக்கான்சாவடி சுடுக்காட்டிற்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும், திட்டச்சேரி பகுதியில் சுற்றிதிரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும், இடிக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை மீண்டும் கட்ட வேண்டும், இந்திராநகா் -தைக்கால் தெரு பகுதிகளில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் முகமது ஷா நவாஸ் வலியுறுத்தினாா்.

கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் முகமது சுல்தான், செய்யது ரியாசுதீன், சுல்தான் ரித்தாவுதீன், பாத்திமா பா்வீன், பாக்கியவதி, கஸ்தூரி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT