பொறையாா் அருகே நல்லாடை ஊராட்சி கொங்கானோடையில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் பங்கேற்று 160 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெரும் புதிய ரேஷன் கடையை திறந்துவைத்து பேசினாா். தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளா் பி.எம். ஸ்ரீதா், மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், ஒன்றிய செயலாளா் அப்துல் மாலிக், ஊராட்சித் தலைவா் காவேரி ஜெய்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.