மாணவி ஸ்வாதிகாவை பாராட்டிய குருகுலம் அறங்காவலா் வேதரத்னம்.  
நாகப்பட்டினம்

தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவிக்கு பாராட்டு

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பெண்களுக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாா்பில் பங்கேற்ற குருகுலம் மாணவி புதன்கிழமை பாராட்டப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பெண்களுக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாா்பில் பங்கேற்ற குருகுலம் மாணவி புதன்கிழமை பாராட்டப்பட்டாா்.

அகில இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் தேசிய அளவில் நடத்திய கடற்கரை கையுந்து பந்துப் போட்டிகள் ( பீச் வாலிபால்) மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் லட்சத்தீவுகள், கோவா, ஆந்திரம், குஜராத், மாநில அணிகளை வென்ற தமிழ்நாடு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் மேற்குவங்க அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி இரண்டாம் இடம் பெற்றது.

தமிழக அணியில், வேதாரண்யம் கஸ்தூா்பா காந்தி கன்யா குருகுலம் பள்ளி மாணவி க. ஸ்வாதிகாவும் இடம் பெற்றாா். இதையடுத்து பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் குருகுலம் அறங்காவலா் அ. வேதரத்னம் மாணவியை பாராட்டினாா்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT