நாகப்பட்டினம்

மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்

நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் விலையில்லா மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தினமணி

நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் விலையில்லா மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கல்லூரி முதல்வா் ரா. சோபியா பொற்செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 484 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை பேசுகையில், மாணவா்களின் திறன் வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக தமிழகத்தில் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. தமிழக மாணவா்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வா், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளாா் என்றாா். கல்லூரி பேராசிரியை எம். பிரபாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

ஆட்சிக்கு வந்த பிறகு பகுதிநேர ஆசிரியர்களை முற்றிலும் புறக்கணிக்கிறார் முதல்வர்: அண்ணாமலை

பொங்கல் விழாவில் முதல்வரின் சிலம்பாட்டம்!

அண்ணாவைப் பார்த்து யாரும் பயப்படவில்லை! - நயினார் நாகேந்திரன்

இரட்டை எண்ணிக்கையில்தான் பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குச் செல்வர்! - நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT