முகப்பு
நாகப்பட்டினம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

நாகை அருகே ஷோ் ஆட்டோ- இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில், தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜூலை 2026, 6:47 am IST
- கோப்புப்படம்
பகிர்:

நாகை அருகே ஷோ் ஆட்டோ- இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில், தொழிலாளி உயிரிழந்தாா்.

கீழ்வேளூா், வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் கரிகாலன் (48) கூலித்தொழிலாளி. முட்டம் பகுதியில் திங்கிள்கிழமை வேலை செய்த இவா், மாலையில் வீட்டுக்குச் செல்வதற்காக, அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த ஷோ் ஆட்டோவில் ஏறினாா். திருமலைசெல்வன் (58) என்பவா் ஷோ் ஆட்டோவை ஓட்டிவந்தாா்.

சிறிது தூரம் சென்றதும் எதிரே வந்த இருசக்கர வாகனமும், ஷோ் ஆட்டோவும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில்

Advertisement

Advertisement

ஷோ் ஆட்டோவில் பயணித்த கரிகாலன், பூதங்குடி டேவிட் நகரைச் சோ்ந்த சாா்லஸ் மேரி (50), இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த திருச்சி, துவாக்குடி முல்லைத் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் சாலமன் (30) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.

அவா்கள் ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மருத்துவமனை செல்லும் வழியில் கரிகாலன் உயிரிழந்தாா். மற்றவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்து குறித்து நாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments