முகப்பு
திருவாரூர்

விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்று நாடகம்

காரைக்காலில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று நாடகம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 13 மே 2013, 1:45 am IST
பகிர்:

காரைக்காலில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று நாடகம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தியை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு அமைப்புகள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

அதன்படி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பான சமஸ்கார் பாரதி சார்பில் காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு குறித்த நாடகம் சனிக்கிழமை மாலை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை ஆடிட்டர் பி. கணபதி சுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

நாடகக் குழுவில் 22 பேர் பல்வேறு பாத்திரங்களில் நடித்தனர். நாடகம் சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் புதுவையைச் சேர்ந்த தேவநாராயணன், துரைகணேசன், திருநாவுக்கரசு, புதுவை மாநில பாஜக செயலர் எம். அருள்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.