திருவாரூர்

பாமணியில் இந்து எழுச்சி நாள் கொண்டாட்டம்

DIN

மன்னார்குடியை அடுத்த கர்ணாவூர் ஊராட்சி, பாமணி கிராமத்தில் அம்பேத்கர் பேரவையின் சார்பில் இந்து எழுச்சி நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பேரவையின் அமைப்பாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். 
சிறப்பு அழைப்பாளராக மன்னார்குடி செண்டலங்கார ராமானுஜ ஜீயர் கலந்துகொண்டார். டிச. 6-ஆம் தேதி இந்து எழுச்சி நாளாக கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, பொதுமக்களுக்கு அவர் இனிப்புகள் வழங்கினார்.
இதில் உத்தரப் பிரசேத மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட பாஜக பொதுச் செயலர் வி.கே. செல்வம், அகில பாரத விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி விக்னேஷ்ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT