திருவாரூர்

இரண்டு மணி நேரம் போக்குவரத்து மாற்றம்

DIN

நீடாமங்கலம்-திருவாரூர் சாலையில், செவ்வாய்க்கிழமை இரண்டு மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன. 
தஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக நாகப்பட்டினம் நோக்கி ஓஎன்ஜிசி பணிக்கு பொருள்களை (வால்வு) ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று நவ. 19-ஆம் தேதி ஒளிமதி கிராமப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. எதிர்பாராதவிதமாக லாரியின் டயர் ஒன்று பள்ளத்தில் சிக்கியதால் லாரியை சாலையில் ஓட்ட இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கிரேன் மூலம் லாரி மீட்கப்பட்டு செவ்வாய்க்கிழமை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதற்காக நீடாமங்கலம் - திருவாரூர் சாலையில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT