எட்டுக்குடி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எட்டுக்குடி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை கந்கசஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எட்டுக்குடி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை கந்கசஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
நிகழாண்டு ஹரிகரன் சிவாச்சாரியாருக்கு காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது.
அக். 21-இல் வெள்ளி மயில் வாகனத்திலும், 22-இல் இடும்ப வாகனத்திலும், 23-இல் யானை வாகனத்திலும், 24-இல் வெள்ளி ரிஷப வாகனத்திலும், 25-இல் காலை 11 மணிக்கு சத்ரு சம்ஹார யாகத்தைத் தொடர்ந்து வெள்ளிஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி அன்னையிடம்
வேல் வாங்கி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரமும், 26-இல் சேவல் மயிலுடன் முருகப்பெருமான் காட்சி அளித்தலும், 27-இல் தெய்வானை, 28-இல் வள்ளி திருக்கல்யாணமும், 29-இல் மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடைகிறது.