முகப்பு
திருவாரூர்

நூலக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் உள்ள நூலகத்துக்கு உறுப்பினர் சேர்க்கும் சிறப்பு முகாம் மாவட்ட நூலக மையம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:36 am IST
பகிர்:

திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் உள்ள நூலகத்துக்கு உறுப்பினர் சேர்க்கும் சிறப்பு முகாம் மாவட்ட நூலக மையம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அடியக்கமங்கலம் மேலத்தெருவில் நடைபெற்ற முகாமில், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ந . தமிழ்க்காவலன், மைய நூலகர்கள் ஐ. அன்னப்பழம், மா. ஆசைத்தம்பி, அடியக்கமங்கல கிளை நூலகர் திலகவதி உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று நூலகத்தில் உறுப்பினராக இணைய வலியுறுத்தி பேசினர். முகாம் மூலம் பள்ளி மாணவ, மாணவியர், மகளிர், தொழிலாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அடியக்கமங்கலம் கிளை நூலகத்தில் உறுப்பினராக  இணைந்தனர். முகாமுக்கான ஏற்பாடுகளை மைய நூலகப் பணியாளர் வீரச்செல்வம் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.