திருவாரூர்

கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். 
திருத்துறைப்பூண்டி தண்டலச்சேரியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில், இரு மாணவர் சங்கப் பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர் வெங்கடேசன் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து வெங்கடேசன் தரப்பில், கல்லூரி முதல்வர் பழ. கெளதமனிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வெங்கடசேனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவர்கள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT