திருவாரூர்

ஓட்டுநர் விஷம் குடித்து சாவு

DIN

நீடாமங்கலம் அருகே விஷம் குடித்த ஓட்டுநர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (36). ஓட்டுநரான இவர், நீடாமங்கலம் அருகே சித்தமல்லி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்தார். அங்கு, கடந்த 9-ஆம் தேதி அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாம்.
இதனால், அவதியடைந்த சண்முகவேல் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. அவரை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை (செப்.14) உயிரிழந்தார். இதுகுறித்து, நீடாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT