திருவாரூர்

இளைஞருக்கு பாட்டில் குத்து

DIN


நீடாமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக ஒரே பிரிவைச் சேர்ந்த இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பாட்டிலால் குத்தப்பட்டார். 
நீடாமங்கலம் அருகேயுள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன் (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த், சந்தோஷ், ஸ்டாலின், நேரு, குணசேகரன் ஆகியோருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இருதரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சு செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது. அப்போது, ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ஆத்திரமடைந்த ஆனந்த் உள்ளிட்டோர் அன்பரசனை பாட்டிலால் குத்தினராம். இதில், காயமடைந்த அன்பரசன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 
இதேபோல், அன்பரசன் தரப்பினர் தாக்கியதில் குணசேகரன் என்பவர் காயமடைந்து நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, நீடாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT