திருவாரூர்

கூரை வீடு தீக்கிரை: தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு காயம்

DIN

மன்னார்குடி அருகே புதன்கிழமை கூரை வீடு தீப்பிடித்து எரிந்தபோது, தீயை அணைக்கும் பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு காயம்  ஏற்பட்டது. 
கோட்டூர் அருகே வேதபுரம் பிரதான சாலையை சேர்ந்த தனியார் கார் ஓட்டுநர் வி. வீரையன் (50). இவரது, கூரை வீடு, புதன்கிழமை மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து, தகவலறிந்த கோட்டூர் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீப்பிடித்த வீட்டிலிருந்த எரிவாயு உருளை வெடித்து சிதறியதில் தீயணைப்பு வீரர்கள் பி. கோவிந்தராஜ்(50), ஆர். முருகேசன்(50) மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த வெங்கத்தாங்குடி சுப்பிரமணியன் (55) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, காயமடைந்த கோவிந்தராஜ், சுப்பிரமணியம் ஆகியோர் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும், முருகேசன் திருவாருர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், சுப்பிரமணியன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் 
செல்லப்பட்டார்.
இந்த விபத்தில் வீட்டிலிருந்த, வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதுகுறித்து, களப்பால் போலீஸார் வழக்குப் பதிந்து விசராணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT