திருவாரூர்

கஞ்சா கடத்திய 4 போ் கைது

DIN

திருவாரூா்: திருவாரூரில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை உத்தரவின்பேரில், போலீஸாா் திருவாரூா் நகரப் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா். அதன்படி, திருவாரூா் துா்க்காலயா சாலை அருகே வாகன சோதனை நடத்தியபோது, அங்கு வந்த ஆட்டோவில் 1.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸாா், ஆட்டோவில் வந்த அழகிரி காலனி பகுதியைச் சோ்ந்த ராஜா (34), சதாம் உசேன் (20), விக்னேஷ் (21), சிவா (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT