திருவாரூர்

புயல் நிவாரணம் வழங்கக் கோரி மனு

DIN

கஜா புயல் நிவாரணப் பொருள்கள் வழங்கக் கோரி திருவாரூர் நகராட்சியில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருவாரூர் நகராட்சி 21-ஆவது வார்டுக்குள்பட்ட மருதப்பாடி, மருதப்பட்டினம், பஜனை மடத்தெரு, வசம்புத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் சரியாக வழங்கப்படவில்லை எனவும், நிவாரண உதவித் தொகையும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. எனினும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இதையடுத்து, அப்பகுதியிலிருந்து திரண்டு வந்த மக்கள், நகராட்சி மேலாளர் கிருஷ்ணவேணியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT