திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு குறித்து மாணவர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் சனிக்கிழமை
விநியோகிக்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் பி.திருமாறன் தலைமை வகித்தார். ஆசிரியர் சங்கச் செயலாளர் முகம்மது ரபீக், உடற்கல்வி இயக்குநர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உதவி தலைமையாசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியர் நாகராஜன், ஓய்வுபெற்ற ஆசிரியர் மருதமுத்து, என்எஸ்எஸ் திட்ட அலுவலர் பொ. சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.