திருவாரூர்

சாய் பாபா கோயிலில் சிறப்பு பூஜை

கூத்தாநல்லூர் வட்டத்தில் வியாழக்கிழமை சாய் பாபா கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

DIN

கூத்தாநல்லூர் வட்டத்தில் வியாழக்கிழமை சாய் பாபா கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
லெட்சுமாங்குடி மரக்கடையில் அமைந்துள்ள ஷீரடி சாய் பாபா தியான பீடத்தில் உள்ள ஷீரடி சாய் பாபாவுக்கு, மஞ்சள் பொடி, பன்னீர், சந்தனம், தயிர், பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனைக்குப் பிறகு அலங்கரிக்கப்பட்ட ஷீரடி சாய் பாபாவுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், சித்தாம்பூரில் அமைந்துள்ள ஷீரடி சாய் பாபாவுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT