திருவாரூர்

கார் மோதியதில் மளிகைக் கடை உரிமையாளர் சாவு

DIN

மன்னார்குடி அருகே செவ்வாய்க்கிழமை கார் மோதியதில் மளிகைக் கடை உரிமையாளர் உயிரிழந்தார்.
 மன்னார்குடி அருகேயுள்ள செருமங்கலம் பிரதான சாலையை சேர்ந்தவர் மு. சபியுல்லா (55). இவர், தனது வீட்டு அருகில் மளிகை கடை நடத்தி வந்தார். செவ்வாய்க்கிழமை மன்னார்குடி சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியவர், பேருந்திலிருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார்.
 அப்போது, அவ்வழியே வந்த கார் மோதிவிட்டு சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சபியுல்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, வடுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய காரின் உரிமையாளர் மன்னார்குடி அருகேயுள்ள எட கீழையூர் ஆர். ராஜ்குமாரை (40) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT