திருவாரூர்

சரக்கு ரயில் பணி காரணமாக போக்குவரத்து பாதிப்பு

DIN

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சரக்கு ரயில் பெட்டி இணைப்பு பணி காரணமாக நெடுஞ்சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீடாமங்கலம், ரயில் நிலையத்தில் இருந்து அவ்வப்போது அரிசி, நெல் போன்றவை சரக்கு ரயிலில் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இதன் காரணமாக சரக்கு ரயில் பெட்டிகள் இணைப்பு பணி, சரக்கு ரயில் பெட்டிகள் பிரித்தல் பணி நடைபெறுவது வழக்கம். இப்பணி நடைபெறும்போது ரயில்வே கேட்மூடப்படுவதும் வழக்கம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை சரக்கு ரயில் பணிக்காக நீடாமங்கலம் ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் ஒரு மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. இதில், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT