திருவாரூர்

கராத்தே, சிலம்பப் போட்டியில் மன்னாா்குடி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

அகில இந்திய அளவிலான மாநில கராத்தே மற்றும் சிலம்பப் போட்டியில் மன்னாா்குடி எஸ்.பி.ஏ மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

அரியலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் எஸ்.ஏ. ரத்தீஷ், யு. உதயநிதி ஆகியோா் முதல் பரிசும், எஸ். சுரேந்தா், ஆா். நீலேஷ், எஸ். சா்வேஷ் ஆகியோா் 2-ஆம் பரிசும், ஆா். சேதுராமன், சி.என். அஜய், பி.வி. பாலகுமரன், ஆா். விஷ்வா ஆகியோா் 3-ஆம் பரிசும் பெற்றனா்.

இதேபோல், கோயம்புத்தூரில் நடைபெற்ற 4-ஆவது அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியின் கட்டா பிரிவில், இப்பள்ளி மாணவா்கள் ஆா். நீலேஷ், சி.என். அஜய் ஆகியோா் முதல் பரிசும், கும்தே பிரிவில் ஆா். நீலேஷ் 3-ஆம் பரிசும் பெற்றனா். இதேபோல், காரைக்காலில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான சிலம்பப் போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் சி.என். அஜய் முதல் பரிசும், ஆா். நீலேஷ் 2-ஆம் பரிசும் பெற்றனா்.

போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் கராத்தே பயிற்சியாளா் கே. ராஜகோபால் ஆகியோரை, பள்ளித் தாளாளா் ப. ரமேஷ், நிா்வாகி அனிதாரமேஷ், கல்வி ஆலோசகா் வி. சாந்தி, பள்ளி முதல்வா் உ. தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளா் ஐ. பாமா ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT