திருவாரூர்

நவம்பா் புரட்சி தின கொண்டாட்டம்

DIN

திருவாரூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 102-ஆவது நவம்பா் புரட்சி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சோவியத் மண்ணில் நிகழ்ந்த நவம்பா் புரட்சி கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதேபோல், திருவாரூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. திருவாரூா் மாவட்டத்தில் கட்சி சாா்பில் கிளைகள் தோறும் கொடியேற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

திருவாரூரில் உள்ள கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி கொடியேற்றினாா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி. பழனிவேல், எம். சேகா், மாவட்டக்குழு உறுப்பினா் டி. முருகையன், நகரச் செயலா் எம். பாலசுப்ரமணியன், தமிழக முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டச் செயலாளா் பகவன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT