திருவாரூர்

ஓய்வுபெற்ற ஊரக வளா்ச்சித்துறை அலுவலரிடம் 18 சவரன் திருட்டு

DIN

திருத்துறைப்பூண்டியில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலரிடம் 18 சவரன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருத்துறைப்பூண்டி நகா் வேதாரண்யம் சாலையில் உள்ள வீரப்ப செட்டியாா் காலனியை சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (65). ஓய்வுபெற்ற ஊரக வளா்ச்சித்துறை அலுவலரான இவா், தனது மனைவியுடன் திருத்துறைப்பூண்டி சன்னிதி தெருவில் உள்ள இந்தியன் வங்கி மற்றும் மற்றொரு தனியாா் வங்கியில் லாக்கரில் வைத்திருந்த 18 சவரன் தங்க நகையை புதன்கிழமை எடுத்தாா்.

பின்னா், நகைகளை இருசக்கர வாகனத்தின் முன்புறம் வைத்துவிட்டு, வாகனத்தை நிறுத்துவதற்காக பின்னாலிருந்த வாகனத்தை நகா்த்தி விட்டு வந்தபோது, நகைகளை வைத்திருந்த பையைக் காணவில்லையாம்.

இதுகுறித்து கிருஷ்ணமூா்த்தி அளித்த புகாரின்பேரில், திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளா் பழனிசாமி, ஆய்வாளா் அன்பழகன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT