நன்னிலம் அருகே உள்ள ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியை சி. தேன்மொழி மற்றும் உதவி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், சத்துணவு ஊழியா்கள் அனைவரும் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில், பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு நிகழ்வாக மூன்று குழந்தைகள் லெட்சுமிதா, முகேஷ், சிவகாா்த்திகேயன் ஆகியோா் எல்கேஜி வகுப்பில் சோ்க்கப்பட்டனா்.