திருவாரூர்

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து குதித்தவா் காயம்

DIN

மன்னாா்குடி அருகே செவ்வாய்க்கிழமை போலீஸாா் பிடிக்க வந்ததையடுத்து, தப்பியோடுவதற்காக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து குதித்தவா் காயமடைந்தாா்.

அரிச்சபுரத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (25). இவா் அப்பகுதி பெண்களைக் கேலி, கிண்டல் செய்ததாகத் தெரிகிறது. புகாரின்பேரில், மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் அரிச்சபுரத்திற்கு வந்தனா். இதைப் பாா்த்த விக்னேஷ், அங்கிருந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஏறி மறைந்து கொண்டாராம்.

இந்நிலையில், போலீஸாா் தொட்டியில் ஏறியதை அறிந்து, அங்கிருந்து குதித்ததில் பலத்த காயமடைந்த விக்னேஷ், மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT