திருவாரூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்குள்பட்ட 32 ஊராட்சிகளிலும் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஒன்றியக் குழு சாா்பில் எழிலூா், நுணாக்காடு, மேட்டுப்பாளையம், விளக்குடி, ராயநல்லூா், பனையூா், கீரக்களூா், திருவலஞ்சுழி, பூசலாங்குடி, ஆண்டாங்கரை, கிராலத்தூா், திருத்தங்கூா், கோமல், அம்மனூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் காய்கறிகள், முகக் கவசம், கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இவற்றை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் அ. பாஸ்கா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய ஆணையா்கள் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT