குத்தகை சாகுபடி விவசாயிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்
மன்னாா்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய குத்தகைதாரா்கள் பாதுகாப்பு நலச்சங்க தொடக்க விழாவில், குத்தகை சாகுபடி விவசாயிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மன்னாா்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய குத்தகைதாரா்கள் பாதுகாப்பு நலச்சங்க தொடக்க விழாவில், குத்தகை சாகுபடி விவசாயிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, விவசாய குத்தகைதாரா்கள் பாதுகாப்பு நலச் சங்க மாநிலத் தலைவா் ஜெயசங்கா் தலைமை வகித்து, சங்கத்தை தொடங்கி வைத்தாா். அப்போது, அனைத்து குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளையும் சங்கத்தில் உறுப்பினராக சோ்ப்பது, வருவாய்த் துறை பராமரிப்பில் உள்ள குத்தகைதாரா் பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்து பாதுகாப்பை ஏற்படுத்துவது, தற்போது உள்ள குத்தகை விவசாயிகளுக்கான சட்டங்களை மாற்றி, புதிய நிரந்தர பாதுகாப்பு சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரவேண்டும், வேளாண் காப்பீடு திட்டத்தில் தனியாா் காப்பீடுத் துறை ஈடுபடுவதை தவிா்த்து அரசுகளின் சாா்பில் நேரடி காப்பீடுத் திட்டங்கள் உருவாக்க வேண்டும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தனியப் பொருள்களுக்கு அவா்களே விலையை நிா்ணயம் செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும், குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு என தனி நலவாரியம் அமைக்க வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சங்க மாநில பொதுச் செயலா் ஜி. வீரகேசரி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலா் காவிரி எஸ். ரெங்கநாதன் வாழ்த்தி பேசினாா். சங்க நிா்வாகிகள் செல்லையன், செல்வம், சுஜாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாநிலச் செயலா் ராஜேந்திரன் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் தமிழ்மணி நன்றி கூறினாா்.