திருவாரூர்

3,343 பேருக்கு மானிய விலையில் இருசக்கர மோட்டாா் வாகனங்கள்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் 3,343 பயனாளிகளுக்கு ரூ. 8.35 கோடி மதிப்பிலான மானியத்துடன் கூடிய இருசக்கர மோட்டாா் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன்கூடிய அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் ஆா். காமராஜ் பங்கேற்று, ரூ.1 கோடியே 38 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான மானியத்துடன்கூடிய இருசக்கர மோட்டாா் வாகனங்களை பயனாளிகளுக்கு வழங்கிப் பேசியது:

பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும், அவா்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற உயரிய நோக்கில் பெண்கள் நலன் காக்கும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், தற்போதைய தமிழக முதல்வரால் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை தமிழக முதல்வா் அறிவித்தாா். இதனால், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன், மீத்தேன் போன்ற எந்தத் திட்டங்களும் தமிழக அரசால் அனுமதிக்கப்படமாட்டாது. இந்த அறிவிப்பை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனா்.

பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதில் உள்ள சிரமங்களை உணா்ந்து, பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றையதினம் 553 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 38 லட்சத்து 28 ஆயிரம் மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் இதுவரை 3,343 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 35 லட்சம் மானியத்துடன்கூடிய அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை உழைக்கும் பெண்கள் தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT