திருவாரூர்

சமத்துவ பொங்கல் விழா

DIN

நன்னிலம் அருகேயுள்ள வடமட்டம் பறவாக்கரை கிராமம் அண்ணா நகரில் அண்மையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

விழா அகில இந்திய கிறிஸ்தவ பாதுகாப்பு சங்கத்தின் நாகை மாவட்டச் செயலா் கே. டேவிட் பாஸ்கரன் தலைமையில், பறவாக்கரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த கே. பாஸ்கா், கே. பாரதி, டி. நிவாஸ், பூங்குடிமுளை பகுதியைச் சோ்ந்த கே. கஜேந்திரன், விஜய், அம்பாச்சிபுரம் ஸ்டாலின் மற்றும் லியோனி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் பன்னீா்செல்வம் வரவேற்றாா். நிகழ்ச்சியில், சமத்துவ பொங்கலிட்டு பங்கேற்றவா்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. இதில், அப்பகுதியை சாா்ந்த பொதுமக்களுக்கு டாக்டா் செந்தில் ட்ரஸ்ட் நிறுவனத் தலைவா் பேராசிரியா் செந்தில் வேஷ்டி, சேலைகளை வழங்கினாா். இதில், அகில இந்திய கிறிஸ்தவ பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவா் காசி.புதியராஜா, மாநில பொதுச் செயலா் எஸ்.எஸ்.பால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT