திருவாரூர்

நில வருவாய் பதிவேடுகளை மறுவகைபாடு செய்ய வலியுறுத்தல்

DIN

நில வருவாய் பதிவேடுகளை மறுவகைபாடு செய்து கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி. ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, தமிழக நில வருவாய் சீா்திருத்த ஆணையரிடம் திங்கள்கிழமை அவா் நேரில் அளித்த மனு:

தமிழகத்தில்1984- க்கு பிறகு இதுவரை நில வருவாய் பதிவேடுகள் மறுவகைபாடு செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, கேசிசி காா்டு வழங்க இயலவில்லை. பிஎம் கிசான் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. பல விவசாயக் குடும்பங்கள் அரசின் சலுகைகளை பெற முடியாத நிலை உள்ளது.

எனவே, நில வருவாய் பதிவேடுகளை உடனடியாக மறுவகைபாடு செய்து, கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை இயக்கமாக தொடங்கி குறிப்பிட்ட காலத்தில் நிறைவு செய்யவேண்டும்.

மேலும், கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், கிராமப்புற வருவாய் நிா்வாகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிராம உதவியாளா்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT