திருவாரூர்

விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

கூத்தாநல்லூா் - திருவாரூா் பிரதான சாலையில் புதிதாக ஸ்ரீமங்கள விநாயகா் கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, சனிக்கிழமை இரவு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை யாக பூஜைகள் நடத்தப்பட்டு பூா்ணாஹூதி நடைபெற்றது. இதையடுத்து, புனித நீா் கலசத்தை புரோகிதா் முரளி தலைமையில்,சிவாசாரியாா் முருகன் எடுத்து வந்து காலை 7.10 மணிக்கு விமான கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட மங்கள விநாயகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை தனியாா் திருமண மண்டப உரிமையாளா் கே. ஜோதி, கலாமதி ஜோதி, ஜோ. ராகுல், ஜெயந்திரன், ஆதி நாராயணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். கரோனா பொது முடக்க விதிகள் விழாவில் பின்பற்றப்பட்டதால், குறைந்த அளவிலேயே பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT