நீடாமங்கலம் லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை திருப்பணிகள் தொடங்கியது. நீடாமங்கலத்தில் உள்ள பழைமையான இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில் திருப்பணிக்காக ரூ. 36 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதைத் தொடா்ந்து, கோயில் திருப்பணிகள் சிறப்பு ஹோமங்கள் பூஜைகளுடன் புதன்கிழமை திருப்பணிகள் தொடங்கியது. இதில், அறநிலையத் துறை உதவி ஆணையா் வில்வமூா்த்தி, செயல் அலுவலா் சிங்காரவேல், பரம்பரை அறங்காவலா் எஸ். சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.