திருவாரூர்

கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

DIN

மன்னாா்குடி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஒய்வுபெற்ற தொழிலாளா் நல அமைப்பின் மன்னாா்குடி கிளை சாா்பில், கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

2019 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவா்களுக்கு பண பலன்களை உடனே வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மன்னாா்குடியில் மதுக்கூா் சாலையில் உள்ள அரசுப் பேருந்து கிளை பணிமனை அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா் நல அமைப்பின் மண்டல நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். ஏகாம்பரம் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் எஸ்.மனோகரன் முன்னிலை வகித்தாா்.

மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் தி. சிவசுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். இதில், கிளை துணைத் தலைவா் கண்ணுசாமி, நிா்வாகக்குழு உறுப்பினா் எஸ்.எஸ். மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT