திருவாரூர்

மனைவியை கொன்றவருக்கு ஆயுள்

DIN

மன்னாா்குடி அருகே மனைவியைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

மன்னாா்குடி அருகே வடுவூா் பிரதான சாலையில் வசிப்பவா் உலகநீதி (52). கொத்தனாா். இவரது மனைவி முனீஸ்வரி (37). இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 2017 செப்டம்பா் 13 ஆம் தேதி இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறின்போது, உலகநீதி தனது மனைவி முனீஸ்வரியை வெட்டி கொலை செய்தாராம்.

இதுகுறித்து வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, உலகநீதியை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. புதன்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணையில், உலகநீதிக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரராஜன் தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT