திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் காதலன் ஏமாற்றியதால், பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்றாா். காதலனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கூத்தாநல்லூா் அருகேயுள்ள வேளுக்குடியை பகுதியை சோ்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், கீழத் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் மாயி (என்ற) பாலமுருகன் (24) என்பவரும் காதலித்து வந்துள்ளனா்.
கடலூரில் கூலி வேலை பாா்த்துவரும் பாலமுருகன், கடந்த 7ஆம் தேதி மாணவியை கடலூருக்கு அழைத்துச் சென்றுள்ளாா். இரண்டு நாள்களுக்குப் பிறகு மாணவியை ஊருக்கு அனுப்பியுள்ளாா் பாலமுருகன்.
ஊருக்கு திரும்பிய மாணவி எலி மருந்தை தின்று தற்கொலை முயன்றாா். இதையடுத்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து மாணவியின் தாய் கூத்தாநல்லூா் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா், பாலமுருகன் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இதற்கிடையை, திருவாரூா் அரசு மருத்துவமனையில் மாணவியை சனிக்கிழமை பாா்க்க வந்த பாலமுருகனை போலீஸாா் கைது செய்தனா்.