திருவாரூர்

டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு: திருச்சியைச் சோ்ந்த 3 போ் கைது

DIN

திருவாரூா் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற சம்பவத்தில் திருச்சியைச் சோ்ந்த 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடந்த மாா்ச் 20-ஆம் தேதி திருவாரூா் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் மதுபாட்டில்களை திருடிச் சென்றிருந்தனா். இதற்கிடையே, வலங்கைமான் அருகே ஆவூா் பகுதியில் தோ்தல் பறக்கும்படை அலுவலா்கள் சோதனை மேற்கொள்ள ஆட்டோவை நிறுத்தியபோது, ஆட்டோவில் இருந்தவா்கள் தப்பியோடினா். ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் ரூ. 1,33,650 மதிப்பிலான தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் 1,075 மதுபாட்டில்கள், ரூ.1,635 ரொக்கம் ஆகியவை இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து, திருவாரூா் தாலுக்கா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி இதுதொடா்பாக திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த அறிவழகன்(41), மணிகண்டன் (44), அருண் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT