நீடாமங்கலம்: வலங்கைமானில் கரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிய கடைகளுக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
வலங்கைமான் கடைவீதியில் வட்டாட்சியா் பரஞ்சோதி தலைமையில் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு பணியில் ஈடுபட்டனா். அப்போது, கரோனா விதிகளை கடைப்பிடிக்க தவறிய உணவகம், செல்லிடப்பேசி கடைகள், மின்சாதன கடைகள் காய்கறி கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட 10 கடைகளை பூட்டி, வருவாய்த்துறையினா் சீல் வைத்தனா்.