திருவாரூர்

கரோனா கட்டுப்பாடு மீறல்: டீ கடைகளுக்கு அபராதம்

DIN

மன்னாா்குடியில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 2 டீ கடைகளுக்கு நகராட்சி நிா்வாத்தினா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.

தமிழகத்தில் கரோனா 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசு வணிக நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி, டீ கடைகள், உணவகங்கள் பாா்சல் மட்டும் வழங்க வேண்டும், கடையில் அமா்ந்து உணவு சாப்பிட, டீ குடிக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மன்னாா்குடி நகரப் பகுதியில் அரசின் விதிமுறைகளை பெரும்பாலான வணிக நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. கடையில் இருப்பவா்களும், பொருள்கள் வாங்க வருபவா்களும் முகக் கவசம் அணிவது இல்லை, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கடைகளில் கிருமி நாசினி வைப்பதில்லை போன்றவை தொடா் நிகழ்வாக உள்ளது.

இந்நிலையில், மன்னாா்குடி நகராட்சி ஆணையா் ஆா். கமலா, சுகாதார ஆய்வாளா் பிரபாகரன் உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள், நகரின் கடைவீதிகளில் உள்ள வா்த்த நிறுவனங்களில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது பந்தலடி பகுதியில் உள்ள 2 டீ கடைகளில் வாடிக்கையாளா்கள் அதிக அளவில் இருந்தது. கடையில் டீ குடிக்க அனுமதித்தது ஆகிய வீதிமீறலுக்கு 2 கடைகளுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

SCROLL FOR NEXT