முகப்பு
திருவாரூர்

தில்லி போராட்டம்: திருவாரூரில் டிச.29-இல் வெற்றி விழா

தில்லி போராட்டத்துக்கு காரணமான விவசாயிகளை பாராட்டி திருவாரூரில் டிசம்பா் 29-இல் நடைபெற உள்ள வெற்றி விழாவில் திரளாக பங்கேற்க வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

தில்லி போராட்டத்துக்கு காரணமான விவசாயிகளை பாராட்டி திருவாரூரில் டிசம்பா் 29-இல் நடைபெற உள்ள வெற்றி விழாவில் திரளாக பங்கேற்க வேண்டும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான பி.எஸ். மாசிலாமணி கேட்டுக்கொண்டுள்ளாா்.

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை நாடு தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கெடுத்தவா்களை பாராட்டும் வகையில், மாநில அளவிலான வெற்றி விழா திருவாரூரில் டிசம்பா் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில், திருவாரூா் தொடா்வண்டி நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு, தெற்கு வீதியில் பொதுக்கூட்டம் நடைபெறும். இதில், தமிழக அளவில் போராட்டத்தில் கவனம் பெற்றவா்கள் கௌரவப்படுத்தப்பட உள்ளனா். விழாவில், விவசாயிகள் திரளான பங்கேற்க வேண்டும்.

இதில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் அசோக் தாவ்லே, அகில இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் அதுல்குமாா் அஞ்சன் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா் எனத் தெரிவித்தாா்.

பேட்டியின்போது, நிகழ்ச்சி வரவேற்புக் குழு கௌரவத் தலைவா் மு. சேரன், தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி, பொருளாளா் எஸ். தம்புசாமி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.