மக்கள் குறைதீா் கூட்டம் தொடங்கியது
கரோனா பொது முடக்கத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை முதல் கூட்டம் தொடங்கியது.
கரோனா பொது முடக்கத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை முதல் கூட்டம் தொடங்கியது.
கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த ஆண்டு மாா்ச் முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா்க் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து, கரோனா தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மக்களிடமிருந்து மனுக்களை பெற பெட்டி வைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. தற்போது அறிவிக்கப்பட்ட தளா்வில் மக்கள் குறைதீா் கூட்டங்களை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 126 மனுக்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பூஷ்ணகுமாா், துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) ராமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.