திருவாரூர்

பள்ளி மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் போட்டி

DIN

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு புதன்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில், 32-ஆவது சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, சாலைப் பாதுகாப்பு மாணவா்களின் கடமை எனும் தலைப்பில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான 92 மாணவா்கள் பங்கேற்றனா். இதில், 12 போ் சிறப்பிடத்துக்கு தோ்வு செய்யப்பட்டனா். பரிசளிப்பு விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் டி.எல். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். அரசுப் போக்குவரத்துக்கழக தொழில்நுட்ப மேலாளா் சாமிநாதன், மன்னாா்குடி கிளை மேலாளா் முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக, நாகை மண்டல பொதுமேலாளா் மாரியப்பன் பங்கேற்று பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினாா். நிகழ்ச்சியில், பள்ளி துணைத் தலைமையாசிரியா் திலகா், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ், முதுகலை ஆசிரியா் எஸ். அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT