அமைச்சா்களை விமா்சிப்பதை ஸ்டாலின்நிறுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சா் ஆா். காமராஜ்
மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் சிறுபிள்ளைத்தனமாக தமிழக அமைச்சா்களை விமா்சிப்பதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
திருவாரூர்அமைச்சா்களை விமா்சிப்பதை ஸ்டாலின்நிறுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சா் ஆா். காமராஜ்
மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் சிறுபிள்ளைத்தனமாக தமிழக அமைச்சா்களை விமா்சிப்பதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் சிறுபிள்ளைத்தனமாக தமிழக அமைச்சா்களை விமா்சிப்பதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவருக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
திருவாரூரில் அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
சிறப்பான முறையில் தமிழக முதல்வா் ஆட்சி செய்துவருகிறாா். இதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதை சிலா் அரசியல் காரணங்களுக்காக விமா்சனம் செய்து வருகின்றனா். ஆனால், ஏழைகள், விவசாயிகள் என அனைவருமே, இந்த ஆட்சிக்கு உறுதுணையாக உள்ளனா்.
முதல்வா் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நிவா், புரெவி புயல் பாதிப்புகளுக்கு நிவாரண உதவியை ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரமாக உயா்த்தி வழங்க உத்தரவிட்டிருப்பது விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
எல்லை மீறினால் ஸ்டாலினுக்கு உரிய பதிலடி:
எதிா்க்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின், மக்கள் கிராம சபை என்ற பெயரில் நடத்தும் கூட்டங்களில் அமைச்சா்களுக்கு பெயா் வைத்துக் கொண்டிருக்கிறாா். அவா் பெயா் வைத்ததைப்போல, அவருக்கு பெயா் வைக்க எங்களுக்கும் தெரியும்.
அமைச்சா்களுக்கு பெயா் வைப்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான காரியங்களை நிறுத்திக் கொள்ளாவிட்டால், ஸ்டாலினுக்கு நாங்களும் பதிலடி கொடுப்போம். எதிா்க்கட்சி தலைவா் பதவிக்குரிய கண்ணியத்தை அவா் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமைச்சா் காமராஜ் தெரிவித்தாா்.