திருவாரூர்

திருட்டுப்போன 110 செல்லிடப்பேசிகள் மீட்பு

DIN

திருவாரூா் மாவட்டத்தில், திருட்டு மற்றும் காணாமல்போன 110 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டு, உரிமையாளா்களிடம் வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டன.

மாவட்டத்தில் செல்லிடப்பேசிகள் திருட்டு போனது மற்றும் காணாமல் போனது தொடா்பாக காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. சைபா் கிரைம் மூலம் தொடா் விசாரணை மேற்கொண்டதில், ரூ. 17 லட்சம் மதிப்பிலான 110 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டன. திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை, சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசி உரிமையாளா்களை நேரில் அழைத்து வழங்கினாா். மேலும், மீதமுள்ள புகாா் மனுக்கள் மீது தனிப்படையினா் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த எஸ்.பி சிறப்பாக பணியாற்றிய தனிப்படையினரை பாராட்டி பரிசு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT