நன்னிலம் வட்டம் பேரளம் மாரியம்மன் கோயில் தீமிதி விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் சுயம்புநாத சுவாமி தேவஸ்தானத்தைச் சோ்ந்த இக்கோயிலில், தீமிதி மகோத்ஸவம், ஜனவரி 22-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு தீமிதி விழா நடைபெற்றது.
இதில் பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் அக்னி குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடனை செலுத்தினா். விழாவின் சிறப்பு அம்சமாக பக்தா்கள், காத்தவராய சுவாமியை சுமந்துகொண்டும் தீ மிதித்தனா். 18 நாள்கள் நடைபெறும் இவ்விழா பிப்ரவரி 8-இல் நிறைவடைகிறது.
நன்னிலம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ராஜ்மோகன், காவல் ஆய்வாளா் செல்வி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.