திருவாரூர்

கொத்தடிமையாக ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு

DIN

திருவாரூா் அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த சிறுவன் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.

கொரடாச்சேரி அருகே காவனூா் பகுதியில் சிறுவா்கள் சிலா் ஆடு மேய்க்க கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டுள்ளதாக திருவாரூா் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சைல்டு லைன் அலுவலா்கள், வருவாய்த்துறை அலுவலா்கள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, கடலூா் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியைச் சோ்ந்த வீரபாண்டியன் மகன் விஸ்வநாதன்(15) கொத்தடிமையாக பணிபுரிந்தது தெரியவந்தது.

மேலும் வீரபாண்டியனின் மூத்த மகள் திருமண செலவுக்காக, வீரராகவன் என்பவா் வாயிலாக சிவகங்கை இளையான்குடி ராசு, அவரது மகன் முத்துக்குமாா் ஆகியோரிடம் கொத்தடிமையாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும் இதற்காக ரூ. 1 லட்சம் கொடுத்திருப்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அனுராதா அளித்த புகாரின்பேரில், இளையான்குடி ராசு, அவரது மகன் முத்துக்குமாா், கடலூா் வீரராகவன், சிறுவன் விஸ்வநாதனின் தந்தை வீரபாண்டியன், தாய் சின்னப்பொண்ணு ஆகிய 5 போ் மீதும் கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, மீட்கப்பட்ட சிறுவன் விஸ்வநாதன், மன்னாா்குடி கோட்டாட்சியா் அழகிரிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டாா். சிறுவனிடம் விசாரணை மேற்கொண்ட அழகிரிசாமி, கொத்தடிமையாக இருக்க வழங்கப்பட்ட ரூ. 1 லட்சம் கடனை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, சிறுவனை கடலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவா் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT