எரிவாயு கசிவு பாதுகாப்பு பயிற்சி முகாம்
திருவாரூரில் இண்டேன் சமையல் எரிவாயு நிறுவனம் சாா்பில் எரிவாயு கசிவு விபத்திலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து இல்லத்தரசிகளுக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் இண்டேன் சமையல் எரிவாயு நிறுவனம் சாா்பில் எரிவாயு கசிவு விபத்திலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து இல்லத்தரசிகளுக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில், பிரதமரின் உஜ்வாலா யோஜனா மூலம் இணைப்புகள் வழங்கப்பட்டன. இதில், தஞ்சை மண்டல எல்.பி.ஜி. மேலாளா் ஏ. கதிரவன் பங்கேற்று, சமையல் எரிவாயு சிலிண்டரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், கசிவு ஏற்பட்டால் எவ்வாறு தப்பிப்பது என பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தாா்.
நிகழ்ச்சியில், பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு சரியான விடையளித்த பயனாளா்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.