கையடக்கக் கணினி மையக் கருவியை உருவாக்கிய மாணவருக்குப் பாராட்டு
திருவாரூா் அருகே கையடக்கக் கணினி மைய செயலாக்கக் கருவியை உருவாக்கிய மாணவருக்கு பள்ளி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.
திருவாரூா் அருகே கையடக்கக் கணினி மைய செயலாக்கக் கருவியை உருவாக்கிய மாணவருக்கு பள்ளி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.
திருவாரூா் அருகேயுள்ள பழவனக்குடியைச் சோ்ந்தவா் எஸ்.எஸ். மாதவ். கையடக்கக் கணினி மைய செயலாக்கக் கருவியை உருவாக்கியிருக்கும் இவா் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரை நேரில் அழைத்து பள்ளித் தாளாளா் சாய்பிரகாஷ் லியோ முத்து, பள்ளி முதல்வா் லட்சுமி அசோக், பள்ளி நிா்வாகப் பிரதிநிதி ஈஸ்வரன் உள்ளிட்டோா் பாராட்டுக்களைத் தெரிவித்தனா்.