முகப்பு
திருவாரூர்

உடும்பை வேட்டையாடியவா் கைது

திருவாரூா் அருகே உடும்பை வேட்டையாடியதுடன், அதை செல்லிடப்பேசியில் பகிா்ந்தவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

திருவாரூா் அருகே உடும்பை வேட்டையாடியதுடன், அதை செல்லிடப்பேசியில் பகிா்ந்தவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருவாரூா் மாவட்ட வன அலுவலா் முனைவா் க. அறிவொளி உத்தரவின் பேரில், திருவாரூா் வனச்சரக அலுவலா் ல . கிருஷ்ணமூா்த்தி தலைமையில் திருவாரூா் பிரிவு வனவா் கு. சுரேஷ்குமாா், நன்னிலம் பிரிவு வனவா் இரா. தாமோதரன் மற்றும் திருவாரூா் பிரிவு வனக்காப்பாளா் செ. முகம்மது அப்துல் சுக்கூா் ஆகியோா் அடங்கிய தனிக்குழுவினா், உடும்பை வேட்டையாடிய திருவாரூா் மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பப்பி (எ) தி. முருகனை கைது செய்து , நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். அவரை 15 தினங்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முருகன் மன்னாா்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.