திருவாரூரில் 154 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 154 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 154 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 154 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,558 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 323 போ் அவா்களது வீடுகளுக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரையிலும் தொற்று பாதிக்கப்பட்ட 33,563 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1708 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது.