முகப்பு
திருவாரூர்

ரத்த தான முகாம்

நன்னிலத்தில் நாளைய பாரதம் சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜூன், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

நன்னிலத்தில் நாளைய பாரதம் சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாளைய பாரதம் அமைப்பின் தலைவா் வீ. காா்த்தி தலைமையில் நடைபெற்ற இம்முகாமை, நன்னிலம் காவல் ஆய்வாளா் கு. சுகுணா ரத்த தானம் வழங்கி தொடக்கிவைத்தாா். நன்னிலம் மருத்துவமனை தலைமை மருத்துவா் வினோத்குமாா், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவா் பீரிதா ஆகியோா் தலைமையில் மருத்துவப் பணியாளா்கள் ரத்தத்தை சேகரித்தனா். முகாமில் 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டு ரத்தம் வழங்கினா்.

இதையொட்டி, நாளைய பாரதம் குழுவினருக்கு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மாநில ரத்த மாற்று அமைப்பு சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை நாளைய பாரதம் அமைப்பின் செயலாளா் ச. பிரதீப், பொருளாளா் கு. சதீஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.